புதுச்சேரி, ஏப்.28- புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 30 மாதத்துக்கும் மேலாக சம்பளம் வழங்கவில்லை. நிலுவை சம்பளம், பணி பாதுகாப்பு வழங்கக் கோரி காந்தி வீதியிலுள்ள அமுதசுரபி தலைமை அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், வெள்ளிக் கிழமை (ஏப்.28) காந்தி வீதி தலைமை அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா நடை பெற்றது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் அய்யனார், ஆறுமுகம், சிவஞானம், மணி மாறன் ஆகிய 4 பேரும் அமுதசுரபியில் விற்பனைக்கு வைத்திருந்த பினாயிலை குடித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடுப்பதற்குள் அய்யனார் உள்ளிட்ட நான்கு பேரும் மயங்கி விழுந்தனர். பிறகு, ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.