காட்சி ஊடகங்களில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சென்னை தலைமைச் செயலகத்தில் சிறந்த தமிழ் உச்சரிப்புக்கான விருதுகளை வழங்கினார். செய்தி துறை செயலாளர் இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள் ஆகியோர் உடனிருந்தனர்.