சென்னை, அக். 26- ஆர்.கே.நகர் கொருக் குப்பேட்டை 41ஆவது வட்டம் நேரு நகரில் உள்ள ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்ததால் போதுமான இடவசதி இன்றி பெரும் சிரமத்திற்கு மக்கள் உள்ளா னார்கள். மேலும் கடந்த 20 ஆண்டு காலமாக அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் ரேசன் கடை கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த னர். இந்நிலையில் மாமன்ற உறுப்பினர் பா.விமலா நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில் ரேசன் கடை கட்ட அங்கு வசிக்கும் முன்னாள் மாமன்ற உறுப்பி னர் சந்தானத்தின் மகன்கள் சந்தோஷ், யுவராஜ் ஆகி யோரை அணுகி நிதி உதவி கோரினார். அவர்கள் 7 லட்சம் ரூபாய் வழங்கினர். அதனடிப்படையில் ரூ21 லட்சம் மதிப்பீட்டில் ரேசன் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் விழா வியாழனன்று (அக். 26) நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பி னர் ஜே.ஜே.எபினேசர், மண்டலக் குழு தலைவர் நேதாஜி கணேசன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்கு உறுப்பினர் ஆர்.லோக நாதன், பகுதிச் செயலாளர் வி ரவிக்குமார், நிர்வாகிகள் சரவணன், கோவிந்தன், ஜோதிபாசு, திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.