புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 8வது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூலை 21) டில்லியில் தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா நடைபெற்றது. இதில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி, கூட்டமைப்பு தலைவர்கள் சிவகோபால் மிஸ்ரா, ராகவேந்திரன், நம்பூதிரி, உமேஷ், யாதவ், ஜனார்தன் மஜூம்தார் உள்ளிட்டோர் பேசினர்.