கிருஷ்ணகிரி, ஆக. 29- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள சாமல்பட்டி, கொடமாண்டப்பட்டி, அந்தேரிப்பட்டி, கூட்ரோடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தற்போது அந்த மரங்கள் காய்ந்து அழிந்து வருகின்றன. புது வகையான நோய் தாக்குதலால் தென்னை மரத்தில் மட்டைகள் காய்வதும், சில வாரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தென்னை மரம் ஒட்டுமொத்தமாக காய்ந்து பட்டு போகிறது. உடனடியாக நோய் தாக்குதல் குறித்தும் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மை துறை அதிகாரி கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.