விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அயலார் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர்கள் நல அறக்கட்டளை இணைந்து நடத்தும் வெளிநாடு செல்லும் தொழிலாளருக்கான புத்தாக்க பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் சி. பழனி குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, ஆட்சியர் நேர்முக உதவியாளர் என்.விஸ்வநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.