districts

img

மின்வாரியத்தின் அலட்சியம்: அசம்பாவிதம் ஏற்படும் அபாயம்

திருவள்ளூர், பிப் 23-   தத்தைமஞ்சி,  இருளர் இன மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரில் மின்சாரம்  பாய்ந்து மூவர் படுகாயம் அடைந்தனர்.  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகில் உள்ள  தத்தைமஞ்சி ஊராட்சிக்குட் பட்ட லட்சுமி அம்மன் நகர்  இருளர் காலனியில்  45 க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடியிருப்புகள் மத்தியில் மின்மாற்றி ஒன்று (டிரான் ஸ்பார்மர்) அமைக்கப்பட்டு உள்ளது. இது அவ்வப் போது மின்தடை ஏற்படும்  நேரத்திலும்,  மின் கோளாறு  ஏற்படும் நேரத்திலும் மின்மாற்றியில் இருந்து தீப்பொறிகள் பறப்பதும்,  மின் ஒயர்கள் அறுந்து விழு வதுமாக  விபத்துக்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பிப்-17 அன்று சுரேஷ்,பொன்னி, மாரியம்மாள் ஆகியோர் குடியிருக்கும் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலை யில் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளனர். பெரும் ஆபத்தை விளை விக்க கூடிய நிலையில் இருக்கும் இந்த மின்மாற் றியை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி இருளர் இன  மக்கள்  மின்வாரியம் மற்றும்  மாவட்ட ஆட்சியருக்கும் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மின்மாற்றியை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி,  மின்சார துறைக்கு கடந்த டிசம்பர் 30 அன்று கடிதம் அனுப்பி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த  மின்மாற்றி மாற்றப்பட வில்லை. மேலும் மின்சாரம் தாக்கி அசம்பாவிதம் ஏற்பட்டு மூன்று பேர் உயிருக்கு ஊறு விளைவிக் கும் அளவிற்கு அபாயத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவர்களுக்கு எந்த உதவியும் அரசு சார்பில் செய்து தரப்படவில்லை. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தெரிவிக்கையில்,  இந்த மின் மாற்றியால் பெரும் சேதம் ஏற்படுவதற் குள்  மின்மாற்றியை வேறு  இடத்திற்கு மாற்றி அபாய நிலையை  சரிசெய்ய வேண்டும், மாவட்ட நிர்வா கம் வலியுறுத்திய பிறகும்  மின்வாரியம் மெத்தனமாக  இருப்பது கண்டிக்கத் தக்கது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அரிசி, மளிகை உள்ளிட்ட உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.