சிதம்பரம், ஜூன் 30-
புவனகிரி அருகே நின்றிருந்த லாரி மீது சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே லாரி ஒன்று நின்று கொண்டி ருந்தது. வெள்ளியன்று (ஜூன் 30) அதிகாலை திருப்பத் தூர் மாவட்டம், ஆதியூர் கிராமத்திலிருந்து தருண்ராஜ் ( 19) அவரது தாய் பரிமளா ( 42) தந்தை பழனிவேல் ( 44 ) விக்கி ( 28) ஓட்டுநர் ஆகிய 4 பேரும் கார் மூலம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தனர். அப்போது, வண்டுராயன்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக எதிரே நின்று கொண்டி ருந்த லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பரிமளா மற்றும் தருண்ராஜ் ஆகிய இரு வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மிகவும் ஆபாத்தனா நிலையில் இருந்த 2 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் சிதம்பரம் ராஜ முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புவன கிரி காவல் துறையினர் உயிரிழந்த 2 உடல்களையும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புவனகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.