திருவள்ளூர், ஜூலை 29-
அத்திப்பட்டு புதுநகரில் இயங்கும் என்டிஇசிஎல் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப்பட்ட தொழி லாளியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் வெள்ளியன்று (ஜூலை 28)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
என்டிஇசிஎல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு நிர்வாகி சூரியநாராயணன் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.விஜயன், கிளை நிர்வாகி பிரபாகரன் உள்ளிட்ட பலர் பேசினர்.
ஒப்பந்த தொழிலாளர்கள் சட்டத்தை, தொழிற்சாலை சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மெகா காண்ட்ராக்ட் என்ற முறையை புகுத்துவதை தடுக்க வேண்டும், சட்டத்தை காலில் போட்டு மிதிக்கும் என்டிஇசிஎல் நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.