districts

img

சிதம்பரம் நாட்டியஞ்சலி விழா மார்ச் 8 தொடங்குகிறது

சிதம்பரம், மார்ச். 3- சிதம்பரத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிவ ராத்திரி  தினத்தில் நாட்டி யஞ்சலி விழா தொடங்கி 5 நாட்கள் நடைபெறு வது வழக்கம். கடந்த 42 ஆண்டுகளாக நடை பெற்றுவந்தநிலையில்  43-வது ஆண்டின் நாட்டி யஞ்சலி விழா வரும் மார்ச் 8 தொடங்கி 12-ந்தேதி முடிவடைகிறது. இது குறித்து சிதம்பரம் நாட்டி யஞ்சலி விழா அறகட்டளை யின் செயலாளர் சம்பந்தம் செய்தியாளர்களிடம் கூறுகையில்  சிதம்பரத்தில் தொடர்ந்து 43 ஆண்டுகளாக சிதம்பரம் நாட்டிஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மட்டு மல்லாமல்  இந்திய அளவிலும் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டிய கலை ஞர்கள் கலந்து கொள்கின்ற னர். நாட்டியஞ்சலி விழா வில்  பாரம்பரியமிக்க பரத நாட்டியம், கூச்சுபுடி, மோகினி ஆட்டம், கதக் மற்றும் இதர வகை நாட்டிய கலைஞர்கள்  5 நாட்களும் சிதம்பரத்தில் தங்கி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற னர். இது  இறை உணர்வும், அர்ப்பணிப்பு உணர்வும் நிறைந்து இருப்பதால் இந்த விழா மற்ற விழாக்களில் இருந்து மாறுபட்டு சிறப்பு பெற்று வருகிறது  என்றார்.  இவருடன் நாட்டியஞ்சலி அறக்கட்டளையின் அறங் காவலர் குழு தலைவர் டாக்டர் முத்துக்குமரன்,  துணை தலைவர் வி.நட ராஜன்  அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணபதி, மருத்துவர் அருள்மொழிச் செல்வன், முத்துக்குமார்  உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.