சென்னை கிண்டியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு கொரோனா பெருந் தொற்று ஏற்பட்டதால், தேவையை கருதி தேசிய முதியோர் நல மருத்துவ மனை, அரசு கொரோனா மருத்துவ மனையாக மாற்றப்பட்டது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கொரோனா மருத்து வமனை செயல்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. பின்னர், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு திறக்கப்பட்டது. கட்டண வார்டுகள் தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தின் கட்டிடம் ஒன்றிய அரசு நிதியில் கட்டப்பட்டிருந்தாலும், தமிழக அரசின் நிதி பங்களிப்போடு தான் மருத்துவமனை தொடங்கப் பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இம்மருத்துவமனை யில் 40 தீவிர சிகிச்சை படுக்கைகள் உட்பட 200 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 5 அறுவை சிகிச்சை அரங்கம், 20 கட்டண வார்டுகள் உள்ளன. கட்டண அறை யில் உணவுடன் சேர்த்து நாள் ஒன்றுக்கு ரூ.900 கட்டணம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மருத்துவம் மட்டுமில்லாமல் முதுமையியல், முதியோர் மருத்து வம் சார்ந்த ஆராய்ச்சிகளும் இந்த மருத்துவமனையில் மேற் கொள்ளப் படுகின்றன.
பல்வேறு சிகிச்சை பிரிவுகள்: புறநோயாளிகள் பிரிவு, அறிவுத் திறன் குறைபாடு சிகிச்சை, எலும்பு தன்மையை உறுதிப்படுத்த சிகிச்சை, எலும்பு தேய்மானம் சிகிச்சை, சிறுநீர் கட்டுப்படுத்த முடியாத முதியவர்க ளுக்கு சிகிச்சை,நாள்பட்ட வலி மற்றும் பிரச்சினைகளுக்கான சிகிச்சை, இதயமருத்துவம், சிறுநீரக மருத்து வம்,மூளை நரம்பியல், மனநல மருத்து வம், இயன்முறை மருத்துவம், புனர்வாழ்வு மருத்துவம், சித்தா, யோகா, யுனானி, ஓமியோபதி மருத்துவ சிகிச்சைகள் இந்த மருத்துவ மனையில் உள்ளன. ஆங்கில மருத்து வம் தவிர மாற்று மருத்துவ சிகிச்சை அறைகள் அனைத்தும் பெரும்பாலும் பூட்டியே கிடக்கின்றன. மருத்துவர்கள் பற்றாக்குறை தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களில் உள்ள முதியவர்களும் இந்த மருத்துவமனையின் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மருத்துவமனை திறக்கப்படும்போதே மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 276 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது போதிய மருத்து வர்கள், செவிலியர்கள் இல்லை. இருக்கும் மருத்துவர்களும் செவிலி யர்களும் கடினமான உழைக்கி றார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கைக் ஏற்ப மருத்துவர்கள் செவிலியர்கள், கடைநிலை ஊழி யர்கள் எண்ணிக்கை இல்லை.
போதிய வசதியில்லாத ஸ்கேன் மையம்
அல்ட்ரா ஸ்கேன் மையத்தில் இரண்டு அறைகள் இருந்தபோதிலும் ஒரு அறை மட்டுமே செயல்படு கிறது. அதில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. ஸ்கேன் எடுக்கப் போகும் போது துணி மற்றும் உட லோடு எந்த உலோக பொருட்களும் எடுத்துச் செல்லக்கூடாது. உடை மாற்ற வும் இடமில்லை. ஸ்கேன் எடுக்க கூட்டத்திற்கு இடையே ஆண்கள் மேலாடை இன்றி நிற்கவேண்டிய நிலையுள்ளது. எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க இந்த மருத்துவமனையில் போதிய அளவு வசதி இல்லாததால் நோயாளிகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, அல்லது கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனைக்கு செல்லவேண்டியுள்ளது. ஒருபகுதி நோயாளிகள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மடைமாற்றம் செய்யப்படுகின்றனர். ரத்த அழுத்தம் பரிசோதிக்கும் சாதனத்திற்கு பேட்டரி இல்லை. அதனை செவிலியரே வாங்கி வரவேண்டியுள்ளது. ரத்தம் எடுப்பதற்கான டியூப்களுக்கு பற்றாக்குறை உள்ளது. நீரிழிவு நோயை பரிசோதனை செய்ய மாதிரி சேகரிக்கும் டப்பாக்கள் பற்றாகுறை என கூறி சிறுநீர் குறித்தான பரி சோதனைகள் ஒன்றிரண்டு நாட்கள் தள்ளிப்போவதும் உண்டு. ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனை நோயாளி களின் வார்டுக்கு வந்து செவிலியர்கள் ரத்தம் எடுத்துச் செல்வார்கள். இங்கு ரத்தம் எடுத்து விட்டு அதை நோயாளியின் உதவி யாளரிடம் கொடுத்து ரத்த பரி சோதனை மையத்திற்கு எடுத்துச் செல்லுமாறு கூறுகிறார்கள். வீல் சேர் இல்லை இந்த மருத்துவமனை முதி யோருக்கு ஏற்படும் உடல் நல பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க துவங்கப்பட்டுள்ள நிலையில் மருத்து வமனைக்கு நடக்கக்கூட முடியாமல் வரும் நோயாளிகளுக்கும் பரிசோத னைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லவும் போதிய வீல் சேர்கள் இல்லை. இதனால் நோயாளிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை
வார்டுகளில் தண்ணீர் பற்றாக் குறை நிலவுகிறது. லாரி வந்து நிலத்தடி நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பும் வரை நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும் இயற்கை உபாதை கழிப்பது உள்பட அவசர தேவைக்கு காத்திருக்கவேண்டியுள்ளது. நோயா ளிகள் வெந்நீர் குடிக்கவேண்டு மானால் அதற்கான வசதி செய்து தரப்படவில்லை. குளியல் அறை யிலும் 3 குழாய்கள் இருந்தாலும் சாதாரண தண்ணீர்தான் வருகிறது. சுடு தண்ணீர் வருவதே இல்லை என நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.
நோயாளி உதவியாளர் அமர இருக்கை இல்லை
நோயாளிகளுக்கு வழங்கப் படும் உணவு சிறப்பாக இருந்தா லும் குறித்தநேரத்திற்கு தரப்படுவ தில்லை, நோயாளிகளின் உதவியா ளர்கள் உட்கார இருக்கைகள் கிடை யாது என நோயாளிகள் வேதனை தெரி வித்தனர். மேலும் இந்த மருத்துவ மனை வளாகத்தில் உள்ள உணவகம் சரியில்லை. அந்த உணவகத்தில் பொங்கல், இட்லி, சிங்கிள் ரைஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் தோசை, சப்பாத்தி, இடியாப்பம் கிடைப்பதிலைலை. வாங்கும் பொருட்களுக்கு பில் வழங்குவதில்லை. மேஜைகளில் சாப்பிட்ட பின்னர் உடனுகுடன் சுத்தம் செய்யப்படுவதில்லை. கேண்டீன் ஊழியர் என்று ஒருவர் மட்டுமே இருக்கிறார். அவர் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களிடம் மென்மையாக நடந்து கொள்வ தில்லை என புகார் எழுகிறது. கார்டியாலஜி மருத்துவர் தான் எக்கோ எடுக்கும் பணியையும் சேர்த்து பார்க்கிறார். இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் குழாயில் அடைப்பு இருந்தால்அதை நீக்க இதே மருத்துவமனையில் ஆஞ்சியோ செய்யப்படுவதில்லை. சென்ட்ரல் அருகே உள்ள ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு செல்லு மாறு கூறுகிறார்கள். உட்புற நோயாளி ஒரு சிறப்பு மருத்துவமனை சந்திக்கவேண்டும் என்றால் குறிப்பாக நரம்பியல், இதய வியல் மருத்துவரிடம் சிகிச்சைபெற வேண்டுமானால் காலை 7.30 மணிக்கு பதிவு செய்யவேண்டும். ஆனால் மருத்துவர்கள் 9 மணிக்கு தான் வரு கிறார். இதனால் மூத்த குடிமக்கள் 2 மணிநேரம் காத்திருக்க வேண்டியுள் ளது. பொது வார்டுகளில் உள்ள நோயா ளிகளின் உதவியாளர்கள் உறவினர் கள் அமரவோ ஓய்வெடுக்கவோ தனி யாக இடவசதி செய்துதரப்பட வில்லை. இதனால் அவர்கள் வரண்டாவில் படுக்கவேண்டியுள் ளது. அவசர சிகிக்சைப்பிரிவு வெளியே பலர் சோகத்துடன் தரையில் படுத்துக்கிடக்கிறார்கள். எனவே முதியோர் நலன் காக்க துவங்கப்பட்ட இந்த மருத்துவமனை அந்த நோக்கத்தை முழுமையாக எட்டும் வகையில் தற்போதுள்ள குறை களை களைய மாநில அரசு உடன டியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நோயாளிகளும் அவர்களது உற வினர்களும் கோரிக்கை விடுத்துள் ளனர். - ந.நி