சென்னை,ஏப்.11 சென்னை வடபழனியில் உள்ள எஸ்.ஆர்.எம் வளா கத்தில் இராமசாமி நினைவு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் மின்னணு மற்றும் தொடர்பியல் துறை இணைந்து “ஜியான் 2023 - ரோபோமானிய அன்லீஷ்டு” என்ற தேசிய அளவிலான ரோபாடிக்ஸ் கருத்தரங்கினை செவ்வாயன்று (ஏப்,11) நடத்தின. துறைத் தலைவர் முனைவர் ஷெர்லி எட்வார்ட் வரவேற்ற னார். கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அனிதா கிறிஸ்டலின் முன்னுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் சி.வி. ஜெயகுமார், துணைமுதல்வர் முனைவர் சிகோமதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற னர். பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன முதுநிலை துணை மேலாண்மை இயக்குனர் (ஓய்வு), இராஜகோபாலன், மாணவர்களின் தொழில்நுட்ப திறனை பாராட்டினார். விழாவின் சிறப்பு அம்சமாக முற்றிலும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஜயோனா 4.0 ரோபாட் சிறப்பு விருந்தி னருக்கு பூச்செண்டு வழங்கி மரியாதை செய்தது. இவ்விழா வில் பேசிய சிறப்பு விருந்தினர் ரோபாடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறையில் வளர்ந்துவரும் தொழில் நுட்பங்கள், பல்வேறு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள், தொழில் வாய்ப்புகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். இந்த கருத்தரங்கில் தேசிய அளவில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவில் மாணவர் ஒருங்கிணைப்பாளர் அரிகரன் நன்றி கூறினார்.