districts

img

சிமேட்ஸ் கல்லூரியில் தேசிய பொறியாளர் தினம்  

சென்னை, செப். 21- சென்னையில் உள்ள  சிமேட்ஸ் பொறியியல் கல்லூரியில் கடந்த செப்டம்பர் 15 அன்று சிறந்த பொறியாளரான  எம். விஸ்வேஸ்வரய்யாவை நினைவு கூறும் தேசிய பொறியாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.   சென்னை தொலைத்தொடர்புத் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் சுதாகர்  பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் என்ற தலைப்பில் பொறியாளர்கள் தின விழாவைத் துவக்கி வைத்து பேசினார்.  இந்த தினத்தையொட்டி, சிமேட்ஸ் பொறியியல் கல்லூரியில்  விவாதம், வினாடி வினா, பிழைத்திருத்தம், சுவரொட்டி வடிவமைப்பு, பொறியியலின் அற்புதங்கள், நடனங்கள், பேஷன் ஷோ, குறும்படம், புகைப்படம் எடுத்தல் போன்ற பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாத நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சவீதா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

;