சென்னை, ஜூன் 17- தேசியக் கல்விக் கொள்கை (என்இபி) மக்களுக்கு விரோதமா னது என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப் பட்டுள்ள உறுதிக்கு முரணானது என்றும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. கோபால கவுடா கூறி னார். சென்னையில் “ இந்திய அரசியல மைப்பின் நெறிமுறைகள், கலாச் சார விழுமியங்கள், முகப்புரை மற்றும் வழிகாட்டுதல் கோட்பாடு கள்,” என்ற தலைப்பில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசிய அவர் இந்த கல்விக்கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக கூறினார். “என்இபி மாநில சட்ட மன்றங்களின் அதிகாரங்களை ஆக்கிரமிக்கிறதா என்பதை நாம் ஆய்வு செய்யவேண்டும். அவ்வாறு செய்தால், இந்த கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு ஒன்றிய அரசு மாநில அரசுகளைக் எப்படி கேட்க முடியுமா? இது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களால் மிகவும் ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம். இந்தியா ஒரு ஜனநாயக குடியரசு என்பதை கருத்தில் கொள்ளவேண் டும் என்றும் அவர் நினைவுபடுத்தி னார். அரசியலமைப்பில் குறிப்பிடப் பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை எடுத்துரைத்த அவர், “ஒவ்வொரு மாநிலமும் சுதந்திரமானது மற்றும் அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் பட்டியல் இரண்டு மற்றும் பட்டியல் 3 இன் கீழ் சட்டங்களை இயற்றுவதற்கு அரசிய லமைப்பின் 246 வது பிரிவின் கீழ் மாநில சட்டமன்றங்களுக்கு அதிகா ரம் உள்ளது. நாடாளுமன்றத்திற்கு இயற்ற அதிகாரம் உள்ளது.
இதில் நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஒன்றிய அரசு அதிகார வரம்பை மீறினால், அரசி யலமைப்பு மற்றும் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புகளின்படி, அந்தச் சட்டத்தை மாநில அரசுகள் புறக் கணிக்க வேண்டும். எந்த ஒரு சட்ட மும் மாநில அரசுகளின் உரிமை களை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்று தான் அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள் ளது. என்இபி-யில் சமஸ்கிருத மொழிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கி யத்துவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த கல்விக்கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் நீங்கள் கற்க வேண்டிய ஒரு மொழியை திணிக்க முயற்சித்தால், நீங்கள் அனைத்து குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்க முயற்சிக்கிறீர் கள் என்று அர்த்தம். இந்தியா பன்முக கலாச்சாரம், பன்முகத்தன்மை கொண்டது. மொழிகளும் மதங்க ளும் அரசியலமைப்பின் கீழ் பாது காக்கப்பட வேண்டும். “அடிப்படை உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கு எதிரான என்இபி- க்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றன. அதன் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது மற்ற மாநிலங்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்று நம்புகிறேன். மக்கள் விரோத, ஜனநாயக விரோத, அரசிய லமைப்பு விரோதக் கொள்கைகளை எதிர்க்கும் அளவுக்கு நாட்டு மக்கள் துணிச்சலை பெற்றுள்ளனர் என்றும் நீதிபதி கவுடா கூறினார். நிகழ்ச்சியில், வி.சி.க., தலை வரும், எம்.பி.யுமான தொல்.திருமா வளவன் பேசுகையில், “சமத்துவ மின்மை என்பது சனாதன தர்மத்தின் ஆவியாகும், அதே சமயம், நவீன இந்தியாவின் அரசியல் சாசனம், சமத்துவம், சகோதரத்துவத்தை ஊக்குவிக்கிறது. சனாதன இந்தியா தான், அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் ஜனநாயக இந்தியாவாக மாற்றப்பட்டது என்றார்.