districts

img

ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு மாநாடு

சென்னை, டிச. 18 - ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் 5வது அகில இந்திய மாநாடு டிச. 13-14 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படியை விடுவிக்க வேண்டும், பிஎஸ்என்எல்-டிஓடி  ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் 1.1.2017 முதல்  மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டிற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சிவ் கோபால் மிஸ்ரா தலைமை தாங்கினார்.  வரவேற்புக் குழுச் செயலாளர் பி.மோகன் வரவேற்றார். வரவேற்புக் குழு செயல் தலைவர் சி.கே.நரசிம்மன் அறிமுகவுரையாற்றினார். சிஐடியு துணைப் பொதுச் செயலாளர் ஸ்வதேஷ் தேப்ராய், உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் துணைப் பொதுச் செயலா ளர் சி.ஸ்ரீகுமார், அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளன பொதுச் செயலாளர் நெ.இல.சீதரன், கூட்டமைப்பின் மாபொதுச் செயலாளர் கே.ராகவேந்திரா உள்ளிட்டோர் பேசினர். வரவேற்புக்குழு பொருளாளர் ஏ.முருகேசன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவ ராக சிவகோபால் மிஸ்ரா, மாபொதுச் செயலராக ராகவேந்திரன், பொருளாள ராக குமார் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.