நாங்குநேரி பள்ளி மாணவர் மீது சக மாணவர்களே நிகழ்த்திய சாதி வன்கொடுமையை கண்டித்து திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் பா. செல்வன், எஸ். ராமதாஸ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், நிர்வாகிகள் எம். வீரபத்திரன், ஏ. லட்சுமணன், ச. குமரன், சி.எ செல்வம், அண்ணாமலை, ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.