திருவண்ணாமலை, ஏப்.13- கொரோனா தடுப்பு மருந்தில் கூட, பாஜக ஊழல் செய்துள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் பஜார் வீதியில் வேட்பாளர் சி. என். அண்ணாதுரையை ஆதரித்து, சிபிஎம் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் பி. சுந்தர் தலைமையில் தாங்கினார் இதில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் பேசுகையில், பிரதமர் மோடி பொய் பேசுவதையே தனது வாடிக்கை யாக கொண்டுள்ளார். அவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மாறாக ஜிஎஸ்டி என்ற பெயரில் மக்களின் வருமானத்தை கொள்ளையடித்தார். மோடி ஆட்சியில் 6 விமான நிலையங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவை தனியார் வசமாக்கப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களில் 10விழுக்காடு நிலக்கரியை அதானிக்கு தாரைவார்க்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உலக நாடு களுக்கு அதானியை கையோடு அழைத்துச் சென்று அவருக்கு தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி தந்த மோடிஅரசு ஏழை மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. கொரோனா காலத்தில் உயிர் பயத்தில் மக்கள் தவித்து போது, அந்த கொரோனா மருந்தில் கூட ஊழல் செய்து ஏழைகளின் உயிரை பலிவாங்கியது. பாஜக ஆளும் மாநிலங்களில், வளர்ச்சியின்மை, வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக, அங்குள்ள இளைஞர்கள் வேலை தேடி தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். அவர்களையும் ஆதரித்து காப்பாற்றி வருகிறது தமிழ்நாடு. எனவே தமிழ்நாடு போல் இந்தியா முழுவதும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் இந்திய கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். பிரச்சாரப்பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம் .சிவக்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே. கே. வெங்கடேசன், கே.காங்கேயன், திமுக ஒன்றிய செயலாளர்கள் எ. சிவகுமார், கே.சுப்பிரமணி, நகர செயலாளர் கே. வி.சவுந்தர்ராஜன் உள்ளிட்டோர் உரை யாற்றினர், நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். பிரகல நாதன், எ.லட்சுமணன், கே. வாசுகி, எஸ்.ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ச. குமரன் வரவேற்றார். தகைசால் தமிழர் என். சங்கரய்யா கலைக்குழு சார்பில் அரசியல் விழிப்பு ணர்வு பாடல்கள் இசைக்கப்பட்டன. நிறை வாக டி. சரவணன் நன்றி கூறினார்.