சென்னை, நவ. 22 - 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று (நவ.22) சென்னை ரிப்பன் மாளிகை வளாகத் தில் ஊழியர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி தவிர்த்த உள்ளாட்சிகளில் 20 வகையான நிரந்தர பணி யிடங்களை தனியார் மயமாக்கும் (அவுட்சோர் சிங்) வகையில் தமிழக அரசு அரசாணை 152ஐ வெளி யிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு சார்பில் தமிழகம் முழுவ தும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்ப டுத்த வேண்டும், அகவிலை ப்படி, இஎல் சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும், என்எம்ஆர், தொகுப் பூதியம், என்யுஎல்எம் ஊழி யர்கள், அம்மா உணவக ஊழியர்கள், மலேரியா பணியாளர்கள், சுய உதவிக் குழு ஊழியர்கள் என பல்வேறு பெயர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலா ளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியம், 8 மணி நேர வேலை, வார விடுப்பு. பண்டிகை விடுப்பு உள்ளிட்ட சட்டச்சலுகை களை அமல்படுத்த வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ஜெ.பட்டாபி தலைமை யில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திரு வேட்டை, சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சீனிவாசுலு, பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் தேவராஜன், முனுசாமி, ராஜன், பி.சுந்தரம், அரசு ஊழியர் சங்கத் தலைவர் சிவக்குமார், 98வது வார்டு கவுன்சிலர் ஆ.பிரிய தர்ஷிணி உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு வடசென்னை மாவட்டம் சார்பில் மூலக் கொத்தளம் மண்டலம் 5 அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், பொருளாளர் வி.குப்புசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.ஜெயராமன், ஆர்.மணி மேகலை, மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.லோக நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தாம்பரம்
தாம்பரம் மாநகராட்சி வளாகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்தப் போராட்டத் திற்கு சங்கத்தின் தலைவர் கே.சி.முருகேசன் தலைமை தாங்கினார். சிஐடியு தென் சென்னை மாவட்டச் செய லாளர் பா.பாலகிருஷ்ணன், சங்கத்தின் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, மூத்தத் தலைவர்கள் எஸ்.அப்பனு, எஸ்.குமாரதாசன், சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், நடராஜன், தனசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.