சென்னை, செப். 19 - சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த அபராத தொகையை அதி கரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பொதுமக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாகத் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி பொதுச் சுகாதாரத் துறையினர் பிடித்து வருகின்றனர். அவற்றை புதுப்பேட்டை, பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. தெருக்களில் திரிந்து மாநகராட்சியால் பிடிக்கப்படும் கால்நடைகளின் உரிமை யாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.2000 வசூலிக்கப்படுகிறது. மேலும் கால்நடைகளை உரிமையாளர்கள் திரும்ப அழைத்துச் செல்லும் வரை நாளொன்றுக்கு கூடுதலாக 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை 3 ஆயிரத்து 241 மாடுகளை பிடித்து 62.90 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் 29 முதல் செப்.11 வரை, 354 மாடுகளை மாநகராட்சி பிடித்துள்ளது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு இடையூறாக அதிகளவில் கால்நடைகள் உள்ளன. எனவே, கால்நடைகளின் நட மாட்டத்தை கட்டுப்படுத்த அபராத தொகையை அதிகரிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதி காரி ஒருவர் கூறுகையில், உரிமையாளர்க ளுக்கு பல முறை அறிவுறுத்தியும் மீண்டும் மீண்டும் சாலைகளில் மாடு களை விடுகின்றனர். இதனால் சாலை பயணிகளுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படு கிறது. இதனை கட்டுப்படுத்த அபராத தொகையை அதிகரிக்க திட்டமிட்டுளோம். இதற்கான தீர்மானத்தை வரவிருக்கிற மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது என்றார். கால்நடைகளின் உரிமையாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சாலைகளில் அவிழ்த்துவிடப்படும் கால்நடைகளை காட்டுப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக வளாகத்திற்கு நிரந்தரமாக அனுப்பவும் திட்டமிட்டு உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.