சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் (மெஸ்) சார்பில் ஆக.1 அன்று தென்சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் பகுதி, எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி ஞாயிறன்று (ஜூலை 30) மாநாட்டிற்கு மக்களை அழைக்கும் இயக்கத்தை வரவேற்புக்குழுத் தலைவர் க.பீம்ராவ் தொடங்கி வைத்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் சி.செங்கல்வராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.