திருவள்ளூர், டிச 24- மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்க ளுக்கு குடும்ப அட்டை இல்லை யென காரணம் கூறாமல் நிவாரணம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. மிக்ஜம் புயல், கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் 6 வட்டங்களில் உள்ள மக்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டனர். இதில் வீடு கள், நெல் பயிர், சாலைகள் என பாதிக்கப்பட்டது. இப்படி பாதிக்கப்பட் டவர்களுக்கு தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6,000 நிவார ணத் தொகை வழங்கப்படும் என அறி வித்தது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, திருவள்ளூர், பூந்த மல்லி, கும்மிடிப்பூண்டி ஊத்துக் கோட்டை, ஆவடி ஆகிய 6 வட்டங்களில் 4,62 லட்சம் குடும்ப அட்டை களுக்கு வழங்க பெயர் பட்டியல், 836 கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.6000 வழங்கப்பட்டது. இருளர் இன மக்களுக்கு முறை யாக குடியிருப்பு வசதிகளை அரசு செய்து கொடுக்காததால் குடும்ப அட்டைகளை சிலர் பெற முடியவில்லை. இந்த நிலையில் குடும்ப அட்டைகள் இல்லாததால் சில இடங்களில் இருளர் இன மக்க ளுக்கு நிவாரண உதவித் தொகை கிடைக்கவில்லை. குடும்ப அட்டை இல்லை என கூறி அதிகாரிகள் நிவார ணம் வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி திருவள்ளூர் மாவட்டத்தில் இருளர் இன மக்கள் 12,000 பேர் வசித்து வருகின்றனர். இதில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றி யத்தில் நரசமங்கலம், கொட்டையூர், அதிகத்தூர், பூண்டி ஒன்றியத்தில் திருப்பாச்சூர் வசந்தம் நகர், பூண்டி, திருப்பேர் மேட்டுக்காலணி, ஆகிய இடங்களில் குடிசைகள் அமைத்து குடியிருந்து வருகின்றனர். இவர்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடிசைகளும் அதிகளவில் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.தமிழ்அரசு கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 20,000 குடிசைகள் சேத மடைந்துள்ளன. இதில் பெரும்பாலான குடிசைகள் இருளர் மக்களைச் சேர்ந்ததாகும். இந்த நிலையில் குடும்ப அட்டைகள் இல்லை என்பதைக் காரணம் காட்டி அதிகமாக பாதிக்கப்பட்ட இரு ளர்களுக்கு நிவாரணம் தர மறுப்பது வேதனையான செயலாகும். அதிகாரிகள் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும், குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து ஒப்புகை சீட்டுவைத்திருப்பவர்களையும் கண்டறிந்து, நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து திருவள்ளூர் வட்டாட்சியரிடம் மனு கொடுத்து 10 நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை. இதில் அதிகாரிகள் இருளர் இன மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.