districts

img

மவுண்ட்பார்க் பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில் முதலிடம்

கள்ளக்குறிச்சி, மே 11- கள்ளக்குறிச்சி மாவட்டம்.தியாகதுருகம் மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளியில் 10- ஆம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவர்கள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.  சிறப்பிடம் பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் விபரம் பாடவாரியாக வருமாறு:  சாய்ஸ்ரீ தமிழ் 99, ஆங்கிலம் 99, கணக்கு 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 என மொத்தம் 497 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். கமல்ராஜ் தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவி யல் 100, சமூக அறிவியல் 99 ஆகமொத்தம் 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். காவ்யாஸ்ரீ தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறி வியல் 99 ஆக மொத்தம் 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.  இப்பள்ளியில் படித்த மாணவர்கள் கணிதம் பாடத்தில் 58 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 19 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 6 மாணவர்க ளும் ஆக மொத்தம் 83 மாணவ, மாணவி கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதேபோல் 490 மதிப்பெண்களுக்கு மேல் 14 மாணவர்க ளும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 32 மாண வர்களும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 59 மாணவர்களும், 460 மதிப்பெண்களுக்கு மேல் 86 மாணவர்களும், 450 மதிப்பெண்க ளுக்கு மேல் 110 மாணவர்களும், 425 மதிப்பெண்களுக்கு மேல் 146 மாண வர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 184 மாணவர்களும், 350 மதிப்பெண்களுக்கு மேல் 231 மாண வர்களும் மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.  இந்நிலையில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் மணி மாறன் நினைவு பரிசு மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவற்றை வழங்கி பாராட்டினார். அப்போது பள்ளி முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன், ஆசிரியர் மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.