districts

img

மோட்டார் வாகன சட்டத்தை திரும்பபெறக்கோரி போராடியவர்கள் கைது

சென்னை, ஏப். 26- கார்ப்ரேட் முதலாளிகளுக்கான புதிய மோட்டார் வாகன சட்டம் - 2019ஐ தமிழ கத்தில் அமல்படுத்தக் கூடாது என வலியு றுத்தி  தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேள னம் சார்பில் சேப்பாக்கத்தில் உள்ளநில அளவை அலுவலகம் அருகே செவ்வாயன்று  (ஏப். 26) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அனைத்து சங்க நிர்வாகி களும், தொழிலாளர்களும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே திரண்டனர். காவல் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை எனக் கூறி அனைவரையும் கைது செய்தனர். இதுகுறித்து தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேள னத்தின் பொருளாளர் வி.குப்புசாமி கூறுகை யில், புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.  இதில் அபராத தொகை மாநில அரசின் ஒப்புதல் இன்றி பத்து மடங்குக்கு மேல் ஏற்றி  அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் தனியார்மயத்தை அனு மதித்து மெக்கானிக், ஓட்டுநர் பயிற்சி பள்ளி  உள்ளிட்ட பல்வேறு மோட்டார் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழி லாளர்களையும், தொழில் நடத்தி வருபவர் களையும் நடுத்தெருவில் தள்ளும் செயலை ஒன்றிய அரசு மேலும் தீவிரப் படுத்தியுள்ளது.

ஓலா, உபேர், ரேபிடோ நிர்வாகங்களை கட்டுப்படுத்தி நியாயமான கட்டணங்களை ஆட்டோ, டாக்சி கால்டாக்சிகளுக்கு நிர்ணயம்  செய்ய வேண்டும். கேரளாவைப் போல பொது போக்குவரத்து கட்டணங்களை நிர்ணயிக்க உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து, பொது போக்குவரத்தை பலப்படுத்தி தனிநபர் வாகன எண்ணிக்கையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்கிடையே மாநில போக்குவரத்து ஆணையர் எஸ்.நடராஜனை சந்தித்து வி.குப்புசாமி, எஸ்.பாலசுப்ரமணியம், பி.அன்பழகன் (ஆட்டோ சம்மேளனம்), ஜாகிர் (உரிமைக் குரல்), வெற்றி (உழைக்கும்  கரங்கள்), பி.ஆர்.சாமி (கால் டாக்சி) உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்து  பேசினர். அப்போது ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  ஆட்டோ கட்டண உயர்வு குறித்து குழு  அமைக்கப்படும் என்றும் சங்க நிர்வாகி களை ஆலோசித்து கட்டணம் நிர்ணயிக்கப் படும் என்றும் ஆணையர் தெரிவித்தார்.