districts

img

முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் போக்குவரத்து ஓய்வூதியர்கள் தொடங்கினர்

சென்னை, ஜூலை 13 -

      அகவிலைப்படி உயர்வை வழங்க கோரி முதலமைச்சருக்கு போக்கு வரத்து ஓய்வூதியர்கள் கடிதம் அனுப்பும் இயக் கத்தை நடத்தி வருகின்ற னர்.

   போக்குவரத்து ஓய்வூ தியர்களுக்கு தமிழக அரசு 91 மாதமாக அகவிலைப்படி உயர்வை வழங்காமல் உள்ளது. அகவிலைப்படி உயர்வை வழங்க வேண் டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைமையில் ஓய்வூதியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

   போக்குவரத்து தொழி லாளர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடை பெறும்போது, தொழிற் சங்கத் தலைவர்களும் ஓய்வூதியர்களின் கோரிக் கையை வலியுறுத்தி பேசுகின்றனர். இருப்பினும் அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.

   இந்நிலையில், மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள அனைத்து பணி மனைகளில் இருந்தும் ஓய்வூதியர்கள், முதலமைச் சருக்கு கோரிக்கைகளை தனித்தனியாக எழுதி, பதிவு அஞ்சலில் அனுப்பும் இயக்கத்தை நடத்தி வருகின்றனர்.

   ஜூலை 13 முதல் 15ந் தேதி வரை இந்த இயக்கம் நடைபெறுகிறது. ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சென்னை மண்டல தலைவர் குருசாமி, பொதுச்செயலாளர் வீரராகவன், பொருளாளர் ஆதிமூலம் உள்ளிட்டோர் பணிமனைகள் தோறும் இந்த இயக்கத்தை தொடங்கி வைத்து, ஒருங்கி ணைத்து வருகின்றனர். ஓய்வுபெற்ற போக்கு வரத்து தொழிலாளர்களின் 91 மாத பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும்,

   மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில்  தமிழ்நாடு முதலமைச் சருக்கு பதிவுத் தபால்  அனுப்பும் இயக்கம் அம்பத்தூர்‌ தொழிற்பேட்டை மாநகர போ‌க்குவரத்துக் கழக பணிமனையில் நடைபெற்றது.