குடியிருப்புகளை சீரமைக்க கோரி மனு கொடுக்கும் இயக்கம் சென்னை, பிப். 19 - உதிர்ந்து விழும் வீட்டு சுவர்களை சீரமைக்க கோரி திங்களன்று (பிப்.19) மனு கொடுக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. எழும்பூர் பகுதி, 77வது வட்டம், கே.பி.பார்க்கில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்பு கட்டப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது. கட்டுமான பணி தரம் இல்லாததால் சுவரில் உள்ள சிமெண்ட் பூச்சு உதிர்ந்து விழுகின்றன. இதனை சரி செய்ய வேண்டும். குடிநீர் குழாய்களை சரி செய்ய வேண்டும், பழுதடைந்த மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும், மேல் தளத்தை சீர் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் கே.முருகன், பகுதிக்குழ உறுப்பினர் த.சித்தார்த்தன், கிளை செயலாளர் கள் கோவிந்தசாமி, கர்ணா, முகேஷ் உள்ளிட்டோர் பகுதி பொறியாளர் வீரவாஞ்சிநாதனிடம் மனு அளித்து பேசினர். இதனைத் தொடர்ந்து நேரடியாக பழுதுகளை ஆய்வு செய்த பொறியாளர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.