அன்னை தெரசா வளாகத்தில் இயற்கை சந்தை இன்று துவக்கம்
சென்னை,செப்,1 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் மாத முதல் வார சனி, ஞாயிறு மற்றும் மாதத்தின் மூன்றாம் வார சனி ஞாயிறு கிழமைகளில் நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இயற்கை சந்தை நடத்திடப்படவுள்ளது. இம்மாத இயற்கை சந்தை செப்.2 (சனிக்கிழமை) செப்.3 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த இயற்கை சந்தையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஓலை பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் கிடைக்கும். மேலும் இயற்கை சந்தையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்கள் கிடைக்கும் என்று தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாமூல் தர மறுத்த நகை கடை உரிமையாளருக்கு வெட்டு
சென்னை, செப். 1- எண்ணூர் நேதாஜி நகர் பகுதியில் பிரகாஷ் ஜூவல்லரி அடகு கடை நடத்தி வருபவர் பாபுலால். அவரிடம் எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த மூன்று பேர் மாமூல் கேட்டுள்ளனர். பாபுலால் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் கையில் இருந்த பட்டாக்கத்தியை எடுத்து பாபுலாலின் தலை மற்றும் கைகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். பாபுலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்களைக் கண்டதும் மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாபுலாலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை-லண்டன் விமானம் ஒரு வாரம் நிறுத்தம்
ஆலந்தூர்,செப்.1- சென்னையில் இருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், நேரடி விமான சேவையை தினமும் இயக்கி வருகிறது. சென்னை-லண்டன் இடையே நேரடி விமான சேவை என்பதாலும், மேலும் லண்டன் சென்று அங்கு இருந்து ஸ்காட்லாந்து, பிரேசல்ஸ், ரோம், பாரிஸ், நியூயார்க், வாஷிங்டன், சிக்காகோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் இருப்பதாலும், சென்னை-லண்டன் தினசரி விமானத்தில், பயணிகள் அதிகமாக பயணம் மேற்கொண்டு வந்தனர். ஆனால் இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு வாரமாக இயக்கப்படவில்லை. இதனால் சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய விமான பயணிகள் தற்போது துபாய், கத்தார், அபுதாபி, பிராங்க்பார்ட் வழியாக லண்டன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஓடும் ரயிலில் நகை வியாபாரியிடம் கொள்ளை
சென்னை,செப்.1- சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். 44 வயதான இவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தொழில் ரீதியாக பெங்களூரு சென்று விட்டு ரயிலில் சென்னை திரும்பினார். தனது பையில் ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை எடுத்து வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து பார்த்த போது பையில் வைத்திருந்த பணம் மற்றும் வெள்ளியை காணாமல் திடுக்கிட்டார். இது தொடர்பாக ரயில்வே போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவகையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை உருவாக்குக
மாற்றுத்திறனாளிகள் சங்கம் முதல்வருக்கு கடிதம்
சென்னை,செப்.1- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் முழுமையாக பயன்படுத்த ஏற்றதாக உரு வாக்க முதல்வர் உத்தரவிடவேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் தோ. வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்சி ராணி அகியோர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: சென்னை வண்டலூர் அருகே விரைவில் திறக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலை யம் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஏற்ற வகை யில் வடிவமைக்க அரசு முயற்சிகள் எடுத்துள்ளதை அறிகிறோம். எனினும், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் முழுமையாக பயன்படுத்த ஏற்றதாக உரு வாக்கப்படவில்லை என தகவல்கள் வந்துள்ளன. குறிப்பாக, பார்வை மாற்றுத்திறனாளி கள் தொட்டுணர்ந்து செல்லும் தரை(tactile floor) அனைத்து இடங்களுக்கும் முழுமை யாக அமைக்கப்படவில்லை என்றும் செவி மற்றும் பேசும் திறன் பாதித்த மாற்றுத்திறனாளிகள் அறியும் வகையில் காட்சி அறிவிப்பு (digital display) எல்லா இடங்களிலும் முழுமையாக அமைக்க ஏற்பாடு இல்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. கடுமையாக பாதித்த மாற்றுத்திறனாளிகள் இயன்ற அளவில் பேருந்துகளின் அருகாமையில் சென்று வாகனங்களை நிறுத்த தனி வசதி, இளைப்பாறும் அறைகள் இல்லை என தெரிகிறது. எனவே, மாற்றுத்திறனாளிகள் உரிமை களுக்கான சங்க பிரதிநிதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும உயர் அதி காரிகளை கொண்டு விரைவில் முழுமை யான ஆய்வு செய்திடவும், சட்ட விதிக ளின்படி உரிய வசதிகளை இப்புதிய பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிடக் கோருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் நாட்டிலேயே முன்னுதாரணமாக இப்பேருந்து நிலையத்தில் மனித வழி காட்டிகள் நியமித்திடவும் கோருகிறோம். கடைகளில் ஒதுக்கீடு இப்புதிய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு குத்தகைவிட உள்ளன. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி 5 விழுக்காடு கடைகளை ஒதுக்கீடு செய்ய உத்தரவிடம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்திக் கோருகிறது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
8 லட்சம் பறிமுதல்: சார் பதிவாளர் மீது வழக்கு
கடலூர், செப். 1- விருத்தாசலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.8 லட்சம் பறிமுதல் செய்த தொடர்பாக சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விருத்தாசலத்தில் ஒருங்கிணைந்த பத்திர பதிவுத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் துணை சார்பதிவாளராக சங்கீதா பணிபுரிந்து வருகிறார். இவர் பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் தொடர்ந்து லஞ்சம் பெறுவதாகும், அதனை ஜிபே, போன் பே மூலமாகவும், நேரடியாகவும் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் ஆய்வாளர்கள் சுந்தர்ராஜன், திருவேங்கடம், ஆய்வுக்குழு தலைவர் முருகன் மற்றும் போலீசார் வியாழனன்று பத்திரப்பதிவு துறை அலுவலகத்திற்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இரவு வரை அந்த ஆய்வு தொடர்ந்தது. இந்த சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.8 லட்சத்து பத்தாயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அந்த பணம் எப்படி வந்தது. என சங்கீதாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு வீட்டுமனை விற்பனை நிருவனத்தில் 10 மனைகள் வாங்குவதற்கு ரூ.45 லட்சம் முன் தொகை கொடுத்தது தெரியவந்தது. மேலும் அவர் நகைகள் வாங்கியதற்கான ரசீதுகள் சிக்கின. இதனை அடுத்து சங்கீதாவையும் அதே அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர் உதயகுமாரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் மீது திங்கள் கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தொழில் முனைவோர் கருத்தரங்கம்
கிருஷ்ணகிரி,செப்.1- ஓசூர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு கணினி துறை மாணவர்களுக்கு இண்டஸ்ட்ரீஸ் மெட்டாவர்ஸ் எனும் கருத்தரங்கம் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் நடைபெற்றது. பி.எம்.சி.டெக் கல்வி குழுமத்தின் தலைவர் பி.குமார் தலைமையில் செயலாளர் பி.மலர் வாழ்த்தி பேசினார். கல்லூரி இயக்குநர் சுதாகர், மு தல்வர் பாலசுப்பிரமணியம் பயிற்சியை துவக்கி வைத்தனர். சென்னை இன் கேஜ் நிறுவனத்தின் திட்ட மேலாளர் அபிஷேக் பயிற்சி அளித்தார்.தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் மைய திட்ட மேலாளர் ராமச்சந்திரன் ஒருங்கிணைத்தார்.