விழுப்புரம், மே 30- விழுப்புரம் மாவட்டம், திண்டி வனம் அருகே உள்ள கீழ்மலை யனூர் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (32). இவர்களுக்கு கவிதா, குணசுந்தரி, நிவேதா ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இதில் கவிதா, தாதாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கிருஷ்ண வேணிக்கும் 10 ஆம் வகுப்பு படிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்ததால், அவர் தனது மகள் கவிதாவுடன் சேர்ந்து படித்து 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். இதில் மாணவி கவிதா 500க்கு 292 மதிப்பெண்களும், அவரது தாய் கிருஷ்ணவேணி 206 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு மகள் கவிதாவுடன் வந்த கிருஷ்ணவேணி ஆட்சியரை சந்தித்தார். அப்போது, தனது குடும்பம் மிகவும் ஏழ்மையில் உள்ளது என்றும், தனக்கு எதா வது ஒரு அரசு வேலையும், மகளின் மேல்படிப்புக்கும் உதவி செய்யுமாறு மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் பழனி, இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்.