districts

img

அக்.31 ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

திருவண்ணாமலை,அக்.8- சம்பள உயர்வுடன் பாக்கி தொகையை வழங்க கோரி வருகிற 31 ஆம் தேதி திரு வண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்று கொசு ஒழிப்பு பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.  திருவண்ணாமலை மாவட்ட கொசு ஒழிப்பு பணியாளர் சங்கத்தின் கோரிக்கை மாநாடு ஞாயிறன்று (அக்.8) வேங்கிக்காலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி .அப்பாசாமி தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா. பாரி,  தலைவர் காங்கேயன், நிர்வாகி கள் எம். வீரபத்திரன், நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அனைவருக்கும் மாதச் சம்பளம் ரூ. 24 ஆயிரம் வழங்க வேண்டும், விபத்துக்கால நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் அறிவித்த தினக்கூலி மூன்றாண்டு காலம் உயர்த்தாமல் இருப்பதை உயர்த்தி வழங்க வேண்டும், மாதாமாதம் சம்பளம் 7 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி வருகிற 31ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்டத் தலைவராக ஆரோக்கிய தாஸ், மாவட்டச் செயலாளராக பி. கணபதி, மாவட்டப் பொருளாளராக தண்டபாணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.