விழுப்புரம்,செப்.2- விழுப்புரம் மாவட்டம், நவமால்மருதூர் கிரா மத்தில் கழிவுநீர் கலந்த குடி நீரை பருகிய 50க்கும் மேற்பட்டோர் பாதிகப் பட்டுள்ளனர்.ஒருவர் உயி ரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட நவமால் மருதூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது, இதனை கிராம பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தி குடித்து உள்ளனர். இந்நிலையில் அவர்களில் சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி மயக்கம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு கள் ஏற்பட்டுள்ளது. உடனடி யாக அவர்கள் அருகி லுள்ள தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றனர், மேலும் சிலர் விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நவமால்மருதூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பையன் மனைவி சியா மளா (வயது 44) என்ப வர் இந்த மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார். சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் சீனன் குமார் ஜெயபால் (வயது 64), முகேஷ் (வயது 5) முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், கனிஷ்மா (வயது 7), லட்சுமி (வயது 36) ஆகியோர் அரியூர், வெங்கடேஸ்வரா மருத்துவமனையிலும், கீர்த்திகா, பிரதீப், கிஷன் ஆகியோர் புதுச் சேரி, ஜிப்மர் மருத்துவ மனையில் மற்றும் பலர் தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிபிஎம் கோரிக்கை
சம்பவத்திற்கு காரண மான நவமால்மருதூர் ஊராட்சி நிர்வாகம், கண்ட மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உயி ரிழந்த குடும்பத்திற்கு ரூ.10- லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நிவார ணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு சார்பில் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். முன்னதாக மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், சே.அறிவழகன், வானூர் வட்ட செயலாளர் எம்.கே.முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கே. சுந்தரமூர்த்தி, கே.வீரமணி, விவசாய சங்க மாவட்ட நிர்வாகி என்.பழனி ஒன்றிய செயலாளர் கே.உலக நாதன், வட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.பால முருகன், ராஜசேகர் உட்பட பலர் உடனிருந்தனர்.