திருவண்ணாமலை அடுத்த அம்மாபாளையம் ஆவின் பால் பவுடர் தொழிற்சாலையில் கடந்த பத்தாண்டுகளாக 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது அந்த வேலைகளை தனியாருக்கு ஒப்பந்தம் விடும் முயற்சியில் ஆவின் நிர்வாகம் இறங்கியுள்ளது. இதனை கைவிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.