புதுச்சேரி, ஏப்.5- தொழிலாளர்களை ஓட்டாண்டியாக்கிய அரசுதான் மோடி அரசு என்று சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந் தரராசன் கூறினார். புதுச்சேரியில் சிஐடியு மாநிலதலைவர் என்.பிரபுராஜ் தலைமையில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு பேரவை கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒன்றியத்தில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக கார்ப்பரேட் முதலாளி களுக்கு ஆதரவான சட்டங்க ளையே நிறைவேற்றி வந்தது. 300க்கும் குறைந்த தொழிலாளர்கள் பணி செய்யும் தொழிற்சாலை களில் தொழிலாளர் நலச் சட்டங்கள் மூலம் கிடைக்க வேண்டிய உரிமைகளை பறித்துள்ளது பாஜக. ஆலை தொழிலாளர்கள் முதல் அடிமட்ட தொழிலா ளர்கள் வரை சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கும் வகையில் முதலா ளிகளுக்கு ஆதரவான சட்டங்களை நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டங் களை நிறைவேற்றும் போது மக்களவையில் மக்கள் பிரதிநிதிகளை விவாதங்க ளுக்கு கூட அனுமதிக்க வில்லை. இதன் மூலம் உரிமைகளை பறித்து தொழி லாளர்களை ஓட்டாண்டி களாக மாற்றியுள்ளது பாஜக மோடி அரசு. சிஐடியு வைத்துள்ள குறைந்தபட்ச மாதச்சம் பளம் ரூ.27 ஆயிரம் இன்னும் கிடைக்கவில்லை. எதிர்க் கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை பழிவாங்கும் வகையில் அரசுகளுக்கு போதிய நிதி பகிர்வு அளிக்காமல் நிதி நெருக் கடியை ஏற்படுத்துகிறது. தமிழகம்,புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் ஆண்டு ஒன்றுக்கு படித்து முடித்து வேலையை எதிர் நோக்கி வரும் இளை ஞர்களின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்ந்துள்ளது. இவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதற்கு மாறாக மக்களை பிளவுபடுத்தி வருகிறது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நீண்டகால மாக கோரிக்கை வைக்கப் பட்டுள்ள நிலையில் மாநில அரசுகளை யூனியன் பிரதேசமாக மாற்றி வரு கிறது பாஜக. எனவே தான் தொழிலாளி வர்க்கம், சங்கம் அமைக்கும் உரிமையை யும், போராடும் உரிமையும் இழக்ககூடாது. எதிர்வரும் மக்களவைத்தேர்தலில் இந்திய ஜனநாயகத்தின் உரிமையை பாதுகாக்க ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவதற்கு இந்திய தொழிலாளர்கள், இந்தியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். முன்னதாக சிஐடியு மாநில செயலாளர் ஜி.சினு வாசன்,சங்க நிர்வாகிகள் முருகன்,கொளஞ்சியப்பன், ரவிச்சந்திரன், ராமசாமி, மதிவாணன் உட்பட பலர் பேரவையில் பங்கேற்றனர்.