districts

ஆர்டிஓ மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சரின் தனிப்பிரிவில் மூதாட்டி புகார்

சென்னை, ஆக. 24-

     அரசு ஆணைக்கு எதிராக யூடிஆர் ஆன்லைன் பட்டாவை ரத்து செய்த வருவாய்  கோட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என முதலமைச்சரின் தனிப்பிரி வில் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.

    சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் 75 வயதான மூதாட்டி உமையவள்ளி. இவருக்கு செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலூகா ஒத்திவாக்கம் மதுரா அம்மணம்பாக்கம் கிராமத்தில் புல எண்.122/9 இல் பரப்பு 12 சென்ட் விவசாய நிலம் சொந்தமானது. இந்த நிலத்திற்கு நில உடமை மேம்பாடு திட்டத்தின் கீழ் ஆன்லைன் யூடிஆர் பட்டா எண் 40 கடந்த 1.1.1987 முதல் வழங்கப்பட்டது.

      இந்த நிலத்திற்கு அ.பதிவேடு, சிட்டா,  அடங்கல் இன்று வரை மூதாட்டி பெயரில்  உள்ளது. இதற்கு நிலவரியும் செலுத்தப் பட்டுள்ளது.

      இந்நிலையில் தாம்பரம் ஆர்.டி.ஓ. அரசு ஆணை 385 நாள் 17.8.2004க்கு எதிராக  யூடிஆர் ஆன்லைன் பட்டாவை, மூதாட்டி யிடம் விசாரணையின்றி ரத்து செய்து விட்டார். ரத்து செய்த உத்தரவை கடந்த 10  மாதமாக மூதாட்டிக்கு அனுப்பி வைக்க வில்லை.

     மேலும் புல எண் 122/9 இல் பரப்பு 12 சென்ட் நிலத்தை உட்பிரிவு புல 122/9 ஏ பரப்பு  9 சென்ட் என்றும், உட்பிரிவு புல எண் 122/9  பி. பரப்பு 50 சென்ட் என்று வேறு நபர்களுக்கு  பட்டா வழங்கியுள்ளார்.

     ஆனால் புல எண்.122/9 இல் பரப்பு 12 சென்ட் நிலத்தை எப்படி 59 சென்ட் நிலமாக  உட்பிரிவு செய்ய முடியும். மேலும் இந்நாள் வரை நில வரைபடம், அ.பதிவேடு, சிட்டா உள்ளிட்ட கிராம கணக்கிலும், திருப்போரூர் சார் பதிவாளர் அலுவலகம் வழிகாட்டு மதிப்பீடு பதிவேட்டி லும் புல எண் 122/9 இல் பரப்பு 12 சென்ட் என்று தான் உள்ளது.

    எனவே 12 சென்ட் நிலத்திற்கு 59 சென்ட்  என்று சட்ட விரோதமாகவும், முறைகேடாக வும் பட்டா வழங்கியதற்கும், யூடிஆர் பட்டாவை ரத்து செய்ததற்கு தாம்பரம் ஆர்.டி.ஓ.மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரின் தனிப்பிரிவில் மூதாட்டி புகார் மனு அளித்துள்ளார்.