districts

img

கொரட்டூர் ஏரியில் ரசாயனக் கழிவு, கழிவு நீர் கலப்பு

அம்பத்தூர், டிச. 10- சென்னையை ஒட்டிய கொரட்டூர் ஏரி 850 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  ஏரியை சுற்றி அக்கரகாரம், எல்லை யம்மன் நகர், சாரதா நகர், கண்டிகை,  லேக்வியூ கார்டன், டி.வி.எஸ் நகர், சிவலிங்கபுரம், சுப்புலட்சுமி நகர், அன்னை நகர், பாலாஜி நகர், சீனிவாச புரம், காந்தி நகர், ராஜீவ் நகர், சிவகாமி நகர், கோபாலகிருஷ்ணன் நகர், திருமலை நகர், கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகர், கருக்கு, ஞானமூர்த்தி நகர், மேனாம்பேடு, மாதனாங்குப்பம், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு இந்த  ஏரியின் பெரும்பகுதி தனி நபர்களால்  ஆக்கிரமிக்கப்பட்டு ஏரியின் பரப்பளவு சுருங்கியது. மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள  100கும் மேற்பட்ட ரசாயன தொழிற் சாலைகள் மற்றும் ஏற்றுமதி ஆடை  நிறுவனங்களில் இருந்து வெளி யேற்றப்படும் ரசாயன கழிவு நீர் மழை நீர் கால்வாய் வழியாக ஏரியில் வந்து கலக்கிறது. இதனால் குடி நீருக்கு  பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அவ்வப்போது மீன்களும் செத்து மிதக்கத் தொடங்கின. இதுகுறித்து அப்பகுதி மக்கள்  அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல  பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கொரட்டூர் ஏரியில் கழிவு  நீரை விட தடை உத்தரவு பிறப்பித்த னர். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிக்கு வந்து ஆய்வு செய்து,

ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாயை அடைத்தனர். இந்நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கடுமையான சூறைக்காற்றுடன் திங்களன்று (டிச. 4) கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆவடி பகுதியிலுள்ள சேக்காடு ஏரி, கவரபாளையம் ஏரி,  விளிஞ்சியம்பாக்கம் ஏரி, பருத்திப் பட்டு ஏரி, அரபாத் ஏரி, அயப்பாக்கம் ஏரி, அம்பத்தூர் ஏரி ஆகியவை நிறைந்து உபரி நீர் வெளியேறியது. இந்த நீர் அம்பத்தூர் வழியாக கொரட்டூர் ஏரிக்கு செல்லும் உபரி  நீர் கால்வாயில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தொழிற்சாலைகளில் தேங்கிய மழை நீருடன் ரசாயனப் பொருட்கள், ஆயில், கழிவு நீர் ஆகியவையும், கருக்கு பகுதி குடியிருப்புகளில் இருந்து கழிவு நீரும் உபரி நீர் கால்வாயில் கலந்து கொரட்டூர் ஏரிக்கு செல்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போது மீண்டும் ஏரியில் ரசாயனக் கழிவுகள், ஆயில்,  கழிவுநீர் கலப்பதால் ஏரி நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. எனவே குடிநீர் ஆதாரமாக இருக்கும் இந்த ஏரியில் நேரடியாக தொழிற்சாலை கழிவுகள், ஆயில், கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க வேண்டும். ஏரியை ஆழப்படுத்தி,  கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்குள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாக பராமரித்து, தொடர்ச்சி யாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.       (ந.நி)