districts

img

புதுப்பிக்கப்படும் மே தின பூங்கா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை, மார்ச் 12 - மே தின பூங்கா ரூ. 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளை செவ்வாயன்று (மார்ச் 12)  அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் தொடங்கி வைத்தார். சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்கா  விளையாட்டு மைதானம்  3.73 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த மைதா னத்தை சென்னைப் பெரு நகர் வளர்ச்சிக் குழுமம் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த உள்ளது. மைதானத்திற்கு அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில், விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம் மற்றும்  பொழுதுபோக்கு வசதி களுடன் கூடியதாக மேம் படுத்தப்படுகிறது. இந்த விளையாட்டு மைதானத்தில் இரண்டு பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம், 100 பார்வை யாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளுடன் கூடிய சறுக்கு வளையம், 50 முதல் 75 வரை பார்வையாளர்கள் அமர்வதற்கு ஏற்ற குத்துச் சண்டை வளையம், பொழுது போக்கு மற்றும் இருக்கை களுடன் கூடிய பசுமை  பகுதிகள், 6 வலைப்பந்தாட்ட மைதானம். அனைத்து வயதி னருக்கான நடை பயிற்சி மற்றும் ஓடுதள பாதைகள், கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானம் மற்றும் பயிற்சி  நோக்கத்திற்காக 3 பயிற்சி வலைகள் ஆகியவை  அமைக்கப்பட உள்ளது. வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறைகள் மற்றும் இதர அத்தியாவ சிய வசதிகள் கொண்ட  மைதானம் மேம்படுத்தப் படுகிறது. இந்தப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில்,  இந்து சமயம் அறநிலை யத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நிலைக் குழு தலை வர் (பணிகள்) நே.சிற்றரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.