districts

img

திருவிக நகரில் அமைச்சர் சேகர்பாபு வாக்கு சேகரிப்பு

வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருவிக நகர் பகுதியில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பகுதிச் செயலாளர்கள் செ.தமிழ்வேந்தன், சாமிக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், நிர்வாகிகள் கே.சுரேஷ், என்.மோகன், எம்.சுப்பிரமணி, எஸ்.இருதயராஜ், கிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெ.டில்லிபாபு, சிபிஐ மாவட்டச் செயலாளர் கு.வேம்புலி வெங்கடேசன், மதிமுக மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், விசிக மாவட்டச் செயலாளர் உஷாராணி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.