கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் மாரங்கியூர் முதல் ஏனாதிமங்கலம் இடையிலான தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டு வந்த தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை அமைச்சர் பொன்முடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, எம்எல்ஏ புகழேந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.