districts

img

1500 பேருக்கு மகளிர் உரிமை தொகை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

விழுப்புரம்,செப்.16-  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு உரிமை தொகை பேருக்கு வழங்கினார். திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா தலைமை தாங்கினார்.செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், ஒன்றியக் குழு தலைவர்கள் விஜயகுமார், கண்மணி நெடுஞ்செழியன், அமுதா ரவிக்குமார், யோகேஸ்வரி மணிமாறன், அனந்தபுரம் பேரூராட்சி தலைவர் முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.