சென்னை, நவ. 10 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று (நவ.11) சேத்துப்பட்டில் நடைபெற்ற ரத்ததான முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பி ரமணியன் தொடங்கி வைத்தார். வாலிபர் சங்கத்தின் 44வது அமைப்பு தினம் நவ.3 நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட ரத்ததான கழகம் சார்பில், சேத்துப்பட்டு பள்ளிச்சாலை ஆரம்ப சுகாதார நிலை யத்தில் ரத்ததான முகாம் நடை பெற்றது. ரத்ததான கழகத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜா.பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமை, அமைச்சர் தொடங்கி வைக்க, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் அஸ்வின் குமார் தலைமையிலான ரத்த வங்கி ஊழியர்கள் 75 பேரின் குருதியை பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில், இ.பரந்தாமன் எம்எல்ஏ, மாநகராட்சி மாமன்ற 108வது வார்டு உறுப்பினர் எல்.சுந்தர்ராஜன், 98வது வார்டு உறுப்பினர் ஆ.பிரிய தர்ஷினி, ரத்ததான கழக மாநில செயலா ளர் எல்.பி.சரவண தமிழன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.மணி கண்டன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.நந்தினி, துணைத் தலைவர் ஜெ.பி.யூஜின் பர்க், செயற்குழு உறுப்பி னர் எல்.விக்னேஷ், எழும்பூர் பகுதி தலைவர் பி.வி.ஹேமந்த் குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ.சாந்தி, தமிழ்நாடு முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலை வர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.