districts

img

திருபெரும்புதூர் தொகுதியில் வாக்கு வித்தியாசத்தை இரட்டிப்பாக்குவோம்

சென்னை, மார்ச் 27 - திருபெரும்புதூர் தொகுதி யில் வாக்கு வித்தியாசத்தை இரட்டிப்பாக்குவோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்தியா கூட்டணி சார்பில்  திருபெரும்புதூர் தொகுதி யில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் களப்பணியாற்றுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுர வாயல் பகுதி முன்னணி ஊழியர் கூட்டம் செவ்வாயன்று (மார்ச் 26) நெற்குன்றத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த தேர்தலில் திருப்பெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு  5 லட்சத்து 7 ஆயிரம் வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெற்றார். இந்த முறை 10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். மாநிலம் முழுவதும் உள்ள 39 தொகுதிகளிலும் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிற நிலை உருவாகி உள்ளது. எனவேதான், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வைத்து தமிழிசை சவுந்தர ராஜன், ஒரு மாதத்திற்கு முன்பு ராஜசபா உறுப்பினரான ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், போட்டியிட மாட்டேன் என்று சொன்ன அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் ஓ. பன்னீர் செல்வம், நடிகை ராதிகா போன்றோரை போட்டியிட வைத்து வாக்கு சதவீதத்தை தக்க வைக்க முயற்சிக்கின்றனர். இரவு உறங்கச் செல்லும்  முன் நகைச்சுவை சேனல்களை  பார்ப்பதற்கு மாறாக, எதிர் அணிகளில் போட்டியிடும் டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், அண்ணாமலை, சீமான் போன்றோரது பிதற்றலை கேட்டாலே போது மானது. அவ்வளவு நகைச்சுவையாக பேசுகின்றனர். இவர்கள் எப்படி பேசினாலும்,  அரசின் சாதனைகளை, ஒன்றிய அரசின் வஞ்சனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி, அறிவார்ந்த பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்” என்றார். மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி பேசுகையில், மதுர வாயல் சட்டமன்ற தொகுதியில் கடந்தமுறை  பெற்ற வாக்கு வித்தியாசத்தை இரட்டிப் பாக்குவோம் என்றார். இந்தக் கூட்டத்திற்கு பகுதிச் செயலாளர்  வி.தாமஸ் தலைமை தாங்கினார். திமுக தென்சென்னை மாவட்ட அவைத் தலைவர்  குணசேகரன், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநகராட்சி 11வது மண்டலக்குழுத் தலைவர்  வே.ராஜன், திமுக தொகுதி பொறுப்பாளர் சேகர், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் அ.ம.துரை வீரமணி, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணசெல்வி மற்றும் எஸ்.பிச்சையம்மாள், க.தண்டபாணி உள்ளிட்டோர் பேசினர்.