districts

img

சமூகவிரோதிகளை வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கு பற்றி பேசலாமா?

சென்னை, மார்ச் 31 - தமிழ்நாட்டில் உள்ள  ஒட்டுமொத்த ரவுடிகளை யும், சமூக விரோதிகளையும்  கட்சியில் வைத்துக் கொண்டு, பிரதமர் தமிழகத் தின் சட்டம் ஒழுங்கு பற்றி  பேசலாமா? என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பினார். இந்தியா கூட்டணியின் தென்சென்னை மக்கள வைத் தொகுதி திமுக வேட் பாளர் த.சுமதி (எ) தமிழச்சி  தங்கபாண்டியன் ஞாயிறன்று (மார்ச் 31)  சைதாப்பேட்டை தொகு தியில் வாக்கு சேகரித்தார். கோட்டூர்புரத்தில் திமுக சென்னை தெற்கு மாவட்டச்  செயலாளர் மா.சுப்பிர மணியன் பேசியதன் சுருக்கம் வருமாறு: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக பிரதமர் கூறுகிறார். 1975 குற்ற வழக்குகளில் தொடர் புடைய 261 குற்றவாளி களில் பாஜகவில் உள்ள னர் என்பது ஒரு பட்டியல்.  தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் கட்சியில் வைத்துக் கொண்டு பிரதமர் சட்டம் ஒழுங்கு பற்றி  பேசலாமா?  பிரதமர் போன்றவர்கள் பொறுப்போடு பேச வேண்டும். தமிழ் மொழி குறித்து பேசும் பிரதமர், தமிழ் மொழி யின் வளர்ச்சிக்கு, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க மறுக்கிறார். மலை குகைக்கு சென்று  போலி போட்டோஷூட் நடத்துகிற பிரதமரின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது இந்தியா முழு மைக்கும் குஜராத் துறை முகங்கள் வழியாகத்தான் போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் போதை பொருட்கள் அதிக மாகி விட்டதாக கூறுகின்ற னர். ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் போன்றோரை ஆந்திரா அல்லது தமிழ் நாட்டில் நிற்க தலைமை அறிவுறுத்தியும் மறுத்து விட்டனர். மக்கள் வாக்க ளிக்க மாட்டார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொண்டு, பணம் இல்லை என்று அபாண்டமாக பொய் சொல்கிறார் நிர்மலா சீதாராமன். தோல்வி பயத்தால்  பாஜக 3 மாநிலங்களில் தேர் தலை புறக்கணித்துள்ளது. பாஜக ஆட்சி செய்யும் குஜராத், உத்திரப்  பிரதேசத்தில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர்கள் போட்டியிட மறுக்கின்றனர். தலைமை உத்தரவிட்டும், போட்டியிட மறுக்கின்றனர். அறிவிக்கப்பட்டவர்களும் ஓட்டம் பிடித்துள்ளனர். பாஜக படுபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. திமுக பொறுப்பேற்ற பிறகு, ரூ.430 கோடி செலவில் கிண்டியில் கலை ஞர் நூற்றாண்டு மருத்துவ மனை கட்டப்பட்டுள்ளது. தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் இல்லாத வசதிகள், நவீன கருவிகள் அந்த மருத்துவமனையில் உள்ளது. தினசரி 1500 புறநோயாளிகள், 500 உள்  நோயாளிகள் பயன்பெறு கின்றனர். அதேபோன்று வயது மூத்தவர்களுக்கான சிறப்பு மருத்துவமனை கிண்டியில் அமைக்கப் பட்டுள்ளது. தினசரி 400க்கும் மேற்பட்ட முதியவர்கள் பயன்பெறுகின்றனர். இத்தகைய பணிகள் தொடர தமிழச்சி தங்கபாண்டி யனுக்கு வாக்களியுங்கள்.  இவ்வாறு அவர் பேசினார். இந்த வாக்கு சேகரிப்பின் போது துணை மேயர் மு.மகேஷ்குமார், திமுக பகுதிச் செயலாளர் கிருஷ் ணமூர்த்தி, சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேஷ், காங்கி ரஸ்  மாவட்டத் தலைவர் முத்தழகன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர் கள் கலந்து கொண்டனர்.