விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம் ஊராட்சி சிப்காட் வளாகத்தில் தொழிற்பூங்கா அமையவுள்ள இடத்தை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் த.மோகன், திண்டிவனம் சாராட்சியர் எம்.பி.அமித், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா,சிப்காட் தொழில் நிறுவன திட்ட அலுவலர் தசெல்வம் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்