districts

img

சமூகநீதிக்கும் அநீதிக்கும் இடையிலான போர்தான் மக்களவைத் தேர்தல்

திருவண்ணாமலை, மார்ச். 29- இந்திய கூட்டணி கட்சி திருவண்ணா மலை வேட்பாளர் சி. என். அண்ணா துரையை ஆதரித்து திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் செயல்வீரர் கள் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில்  திமுக திரு வண்ணாமலை  மாவட்டச் செயலாளர்  எ.வ.வேலு பேசியபோது,  தற்போது நடை பெற உள்ள தேர்தல் சமூக நீதிக்கும் அநீ திக்கும் இடையே நடைபெறும் போராகவே உள்ளது. ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் இடையிலான இந்த தேர்தலில் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.  ஜிஎஸ்டி வரியை தமிழகத்தில் கொண்டு வர காரணமாக இருந்த இபிஎஸ், ஓபிஎஸ் செயல்பாடுகளை எதிர்த்து நமது பிரச்சாரம் அமைய வேண்டும் . ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படும் நிதி பாஜக ஆளும் வட மாநிலங்களில், கூடு தலாக  திரும்ப வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி பணம் கூட வட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது என்று கண்டனம் தெரிவித்தார். தமிழகத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது,  பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஒரு பைசா கூட நிதி உதவி வழங்கவில்லை எனவும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.  முன்னதாக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை பேசுகையில்,  எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான் பல்வேறு திட்டங்களை திரு வண்ணாமலை மக்களவைத் தொகுதியில் செயல்படுத்தி உள்ளேன். தற்போது இந்திய கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்று தெரி வித்தார். இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், எம். வீரபத்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.