வருங்கால வைப்பு நிதி மூலம் ஓய்வூதியம் (இபிஎஸ் 95) பெறுவோருக்கு குறைந்தப்பட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாயை அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், ஓய்வூதியர்களை இஎஸ்ஐ திட்டத்தில் இணைக்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில்வே கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, உயர் ஓய்வூதிய தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.17 அன்று சென்னையில் இபிஎஸ் 95 ஓய்வூதியர்கள் நலச்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.