சென்னையில் மெட்ரோ இணைப்பு வாகன சேவை தொடக்கம்
சென்னை, ஜன. 18- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இணைந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்த் டெக் பூங்காவிலிருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ இணைப்பு வாகன சேவையை தொடங்கியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணைப்பு வாகன சேவைகள் சென்னை முழுவதும் உள்ள பல ஐடி பூங்காக்க ளில் தொடங்கப்பட்டுள்ளன. நகரப் பயணிகளுக்கு அவர்களின் பணியிடத்திலிருந்து அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இணைப்பு வாகன சேவைகளை வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இணைந்து மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜெயந்த் டெக் பூங்கா வில் பணிபுரிவோரின் போக்குவரத்து நலன் கருதி அவர்களுக் கான மெட்ரோ இணைப்பு வாகன சேவையை தொடங்கி யுள்ளது. இந்த சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எஸ்.சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்) வியாழனன்று (ஜன. 18) தொடங்கி வைத்தார். இதில், பாஸ்ட் ட்ராக் கேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.அம்பிகாபதி, ஜெயந்த் டெக் பார்க் நிறுவனத்தின் மேலாளர் வி.பால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் ஜெயந்த் டெக் பார்க், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை நந்தம்பாக்கம் இடையே தோராயமாக 5 கி.மீ நீளத்திற்கு, சாலை போக்குவரத்து நெரிசலின் அடிப்படை யில் 15 முதல் 20 நிமிடங்களில் இணைப்பு வாகன சேவை இயக்கப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணைப்பு வாகன சேவை குளிரூட்டப்பட்ட 18 இருக்கை கள் கொண்டது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படும். இந்த இணைப்பு வாகன சேவை இயக்கப்படும் நேரம் பயணிகளின் தேவைக்கேற்ப மாறுதலுக்கு உட்பட்டதாகும். Fastrack Cabs மொபைல் அப்ளிகேஷனில் மெட்ரோ கனெக்ட் சேவையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பயணிகள் மெட்ரோ இணைப்பு வாகன சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு பயணத்திற்கு ஒரு நபருக்கான கட்டணம் ரூ.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு வாகன சேவை தினசரி பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரயில் பாலம் இடிந்து விழுந்தது
சென்னை,ஜன. 18- சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் கட்டு மான பணியின் போது விபத்து ஏற்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் திட்டம் பல ஆண்டுகளாக செயல் பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தை வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன. தில்லை கங்கா நகரில் வியாழக்கிழமை மாலை இரு தூண்களுக்கு இடையே உள்ள கான்கிரீட் கட்டுமானம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் பெரி தாக காயம் ஏற்படவில்லை. ஏற்கனவே அந்தப் பகுதி யில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப் பட்டுள்ளது. கட்டுமான பணியின் போது பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது குறித்து ஆதம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறை தீர்க்கும் முகாம்
விழுப்புரம்,ஜன.18- விழுப்புரம் மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ், சனிக்கிழமையன்று (ஜன.20) வட்டாட்சியர் அலுவ லகங்களில் குறைவு தீர்வு முகாம் நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்களால் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. இந்த குறைதீர் முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்கள் கொடுக்கலாம். மேலும், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்தும் புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்தும் புகார் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோனியின் ரசிகர் தற்கொலை
கடலூர், ஜன.18- கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபி கிருஷ்ணன். இவர் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் தீவிர ரசிகர். அவருக்கு அன்பரசி என்ற மனைவியும் கிஷோர் (10) மற்றும் சக்திதரன் (8) என்ற மகன்கள் உள்ளனர். சி.எஸ்.கே அணியின் வண்ணத்தில் வீட்டின் கலர் மஞ்சள் நிறத்தில் மாற்றியவர். வீடு முழுவதும் தோனியின் படங்களை வரைந்து வைத்துள்ளதால் தோனியின் ரசிகர்கள் பலர் அவரது வீட்டை வந்து பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில், ஜன.18 அன்று அவரது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராமநத்தம் காவல் துறையினர். உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோபி கிருஷ்ணன் மீது தாக்கு தல் நடத்திய நபர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.