சென்னை,மே 27-
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறித்து பத்திரிகையாளர்கள் பார்வையிடல் நிகழ்வு வெள்ளியன்று நடைபெற்றது.
அப்போது, ரயில் பெட்டிகள் தயாரிப்பின் ஆரம்பம் முதல் இறுதி கட்டப்பணிகள் வரை ரயில்வே துறை அதிகாரிகள் நேரடியாக விளக்கினர். இதைத்தொடர்ந்து, ஐ.சி.எப். பொதுமேலாளர் மால்யா நிருபர்களிடம் கூறியதாவது:- ஐ.சி.எப்.-ல் இதுவரை 21 வந்தே பாரத் ரயில்கள் தயார் செய்யப்பட்டு ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 21-வது வந்தே பாரத் ரயில் சனிக்கிழமையன்று ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஐ.சி.எப்., தலைமை எந்திரப்பொறியாளர் பாபு, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்றனர்.