இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரருமான வ.சுப்பையாவின் நினைவு தினத்தையொட்டி நெல்லிதோப்பு பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு புதனன்று (அக். 12) புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.