வேலூர் நறுவீ மருத்துவமனையில் கென்யா நாட்டின் கிசுமு மாகாண நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளியன்று (ஜூன் 9) கையெழுத்தானது. இதில் கிசுமு மாகாண கவர்னர் அன்யாங் நியோங்கோ, நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் ஆகியோர் கையெழுத்திட்டனர். கிசுமு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் கிரிகோரி காண்டா, ஜார்மோகி ஒகிங்கா ஒடிங்கா மருத்துவமனை தலைமை அரசு மருத்துவக் கல்லூரி செயல் அலுவலர் ஜார்ஜ் ரே, நறுவீ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குனர் டாக்டர் பால் ஹென்றி, தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், பொது மேலாளர் நிதின் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.