10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 82 விழுக்காடு தேர்ச்சி பெற்ற சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் உள்ள எர்ணாவூர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் பாராட்டினார். மேலும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.