செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் மழையால் இறந்த நபர்களின் குடும்பத்தினருக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ரூ.5 லட்சத்திற்கான நிவாரண உதவிகளை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.