districts

img

இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் மருத்துவக் கல்லூரி செயலாளர் லாஸ்யா, இயக்குனர் ராஜா முத்தையா, முதல்வர் சோமசேகர், துணை முதல்வர் ஆனந்த் ரெட்டி, மருத்துவ அதிகாரி பார்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.